Header Ads

உள்பக்கமாக பூட்டி இருந்த கதவை திறந்து அதிர்ச்சி அடைந்த கணவன்

சென்னை போரூரை சேர்ந்தவர் மகேஷ் வயதி 25 இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு பிரதீப்(4) சக்திவேல் (2) என இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதிப்புக்கு பிறவியில் காது  மற்றும் வாய் பேசும் திறன் கிடையாது.
இந்நிலையில் இளைய மகன் சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு காது கேக்காது என கூறியுள்ளனர்.




ஏற்கனவே மூத்த மகன்னுக்கு 3 லட்சம் வரை செலவு செய்து வரும் நிலையில் இளைய மகனுக்கும் இந்த பாதிப்பு வந்ததால் மிகுந்த மன வேதனை அடைந்தார்.
இதையடுத்து அவர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.இந்நிலையில் மூத்த மகனை மாமியார் வீட்டில் விட்டு வந்த மகேஷ் வீட்டின் கதவு பூட்டப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் வீட்டின் பின் பக்க கதவை திறந்து பார்த்த போது மனைவி அஸ்வினி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் இளைய மகன் சக்திவேலை அஷ்வினி தலையணையை வைத்து கொலை செய்துள்ளதையும் உணர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.